For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாரி மீது ரயில் மோதல்: ஒருவர் பலி-10 ரயில் பயணிகள் காயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை எண்ணூர் அருகே ரயில் மீது லாரி மோதியதில் ஒருவர் கால் ஒடிந்து பலியானார். பல ரயில் பயணிகள் காயமடைந்தனர்.

பீகாரிலிருந்து கேரளாவிற்கு செல்லும் ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை எண்ணூர் அருகே வந்துக் கொண்டிருந்தது.

இங்கு துறைமுகத்துக்கு சரக்குகள் ஏற்றி செல்வதற்காக புது தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனால் பழைய தண்டவாளம் உயரத்திற்கு மணல் கொட்டப்பட்டு வருகிறது.

அப்போது ஒரு லாரி மணல் கொட்டிவிட்டு திரும்பும் போது மணலில் சிக்கிக் கொண்டது. பல முறை முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் ரயில் வேகமாக வந்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த லாரி டிரைவரும், கிளீனரும் லாரியிலிருந்து குதித்தனர்.

அப்போது வேகமாக வந்த ரயில் லாரியின் முன்புறத்தை வேகமாக உரசியபடி சென்றது. இதனால் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்திருந்த ஆனந்த்(30) என்ற பயணி கால் ஒடிந்து விழுந்தார். தலையிலும் பலமாக அடிப்பட்டதால் அதே இடத்தில் உயிரிழந்தார்.

ரயில் உரசியபடி சென்றதில் ரயில் பெட்டியின் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த 10 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. இதில் காயம் அடைந்தவர்கள் அனைவரையும் சென்னை பொது சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். ரயில்வே உயர் அதிகாரிகளும் சென்று பார்வையிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X