For Daily Alerts
Just In
தமிழக தொழிலாளர் மலேசியாவில் படுகொலை
கோலாலம்பூர்:தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் மலேசியாவில் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (28). மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவரது இறந்த உடல் கோலாலம்பூருக்கு வெளியே ஒரு கிராமத்தில் கிடந்தது தெரிய வந்தது.
உடலை மீட்ட போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். கணேஷின் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் உள்ளன. அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கணேஷ் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர்தான் கணேஷை அடித்துக் கொன்றிருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.
tamil nadu youth மலேசியா வேலை thatstamil தமிழகம் beaten employees international உரிமையாளர் படுகொலை labour world news ganesh கணேஷ் updates online tamil போலீஸார்
Story first published: Sunday, April 29, 2007, 5:30 [IST]