For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பேசியுள்ளார்.

அதில் பேசிய நபர், தோஹாவிலிருந்து சென்னைக்கு வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு மனித வெடிகுண்டு பயணிப்பதாகவும், விமான நிலையத்திற்கு வந்ததும் அந்த மனித வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மறு முனையில் பேசியவர் கூறியுள்ளார்.

இதையடுத்து இத்தகவலை கர்நாடக டிஜிபிக்கு அந்த சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அவர் தமிழக டிஜிபிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அண்ணா பன்னாட்டு முனையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டிஜிபி முகர்ஜி உத்தரவிட்டார். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். தோஹாவிலிருந்து 177 பயணிகளுடன் அந்த விமானம் தரையிறங்கிதும், பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. விமானத்தில் குண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து பயமிகள் அனைவரையும் இறக்கிய பின்னர் விமானம் முழுவதும் முழுமையாக ேசாதனையிடப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து அத்தகவல் வெறும் வதந்தி எனத் தெரிய வந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோஹாவுக்கு செல்லவிருந்த 134 பயணிகளின் உடமைகளும் தீவிரமாக சோதனை இடப்பட்டு அதன் பின்னரே அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

இந்த குழப்பம் காரணமாக சுமார் 1 மணி ேநர தாமதத்திற்குப் பின்னர் தோஹா செல்ல வேண்டிய விமானம் கிளம்பிச் ெசன்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X