விவகாரத்து கேட்கும் இளம் ஐபிஎஸ் அதிகாரி!
சென்னை:சென்னை கோட்டை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக இருக்கும் பாலகிருஷ்ணன், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். ஆனால் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி முதல்வர் அலுவலகத்தில் அவரது மனைவி மனு செய்துள்ளார்.
கோட்டை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக இருப்பவர் பாலகிருஷ்ணன். 30 வயதே ஆகும் பாலகிருஷ்ணன் மிகவும் நேர்மையானவர், திறமையானவர் என காவல்துறையில் பெயரெடுத்தவர்.
இவருக்கு செலின் ரோஸ் (26) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பாலகிருஷ்ணனின் தந்தையும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
2 ஆண்டுளுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக பயிற்சி முடித்த பாலகிருஷ்ணன் முதலில் திருப்பூரில் உதவிக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை கோட்ைட துணை ஆணையராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் பாலகிருஷ்ணன்.
இதற்கிடையே அவரது மனைவி செலின், முதல்வர் அலுவலகத்திற்கும், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கும் தனித் தனியாக மனுக்கள் அனுப்பி, தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரியுள்ளார்.
இதையடுத்து பாலகிருஷ்ணனை அழைத்து முதல்வர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது விரிவான விளக்கத்தை அளித்துள்ளார் பாலகிருஷ்ணன்.
முதல்வர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள விளக்கக் கடிதத்தில், நான் முதலில் வங்கியில் பணியாற்றினேன். பின்னர் மத்திய அரசின் செய்திப் பிரிவில் பணியாற்றினேனன். எனது மனைவி கிறிஸ்தவர். எனக்கும், எனது மனைவிக்கும் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம்தான் சொந்த ஊர்.
பெற்றோர் பார்த்து எங்களது திருமணத்தை திருவனந்தபுரத்தில் நடத்தி வைத்தனர். கல்யாணம் நடந்தபோது நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக இல்லை. இதனால் என்னை எனது மனைவியும், அவரது குடும்பத்தினரும் உதாசீனமாக நடத்தினர். என்னை அவர்கள் மதிக்கவே இல்லை.
இருந்தாலும் அதை சகித்துக் கொண்டு நான்கு ஆண்டு காலம் பொறுமையுடன் குடும்பம் நடத்தினேனன். அதன் விளைவாக எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
நானாக எனது மனைவியைப் பிரிந்து செல்லவில்லை. அவராகத்தான் சென்றார். உதாசீனப்படுத்திய எனது மனைவியுடன் வாழ விரும்பவில்லை.
எனது மகளை நானே வளர்க்க தயாராக உள்ளேன். அவளுக்குச் செய்ய வேண்டியவற்றை செய்யவும் தயாராக உள்ளேன். மனைவியுடன் மீண்டும் குடும்பம் நடத்தத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார் பாலகிருஷ்ணன்.