For Daily Alerts
Just In
திருப்பதியில் விருந்தினர் மாளிகை: அம்பானி நன்கொடை
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.6.5 கோடி செலவில் விருந்தினர் மாளிகை ஒன்றை தொழிலதிபர் முகேஷ் அம்பானி கட்டிக் கொடுத்துள்ளார்.
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. இது தவிர பல தொழிலதிபர்களும் திருப்பதி கோவிலுக்காக பல்வேறு நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ரூ. 6.5 கோடி செலவில் பிரம்மாண்டமான விருந்தினர் மாளிகையை நன்கொடையாக கட்டி கொடுத்துள்ளார். இந்த மாளிகையை அவரது மனைவி திறந்து வைத்தார்.
விருந்தினர் மாளிகைக்கான சாவியை திருமலை தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டியிடம் முகேஷ் அம்பானி வழங்கினார்.
Comments
temple தலைவர் house திருப்பதி mukesh ambani reliance ரிலையன்ஸ் donation நன்கொடை முகேஷ் அம்பானி national திருமலை tirupathi india news தேவஸ்தானம் online விருந்தினர் மாளிகை guest
Story first published: Wednesday, May 2, 2007, 5:30 [IST]