For Quick Alerts
For Daily Alerts
Just In
தத்து குழந்தைகளின் சங்கம நிகழ்ச்சி
சென்னை:தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் சங்கம நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் தங்கள் தத்துக் குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பிவேர்லி ஹோட்டலில் அமைச்சர் பூங்கோதை தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக சமூக நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது.
விழாவில் முதல்வரின் மகளும் கவிஞருமான கனிமொழி கலந்து கொண்டு தத்து திட்டம் குறித்த கையேட்டை வெளியிட்டார். தத்தெடுப்பது குறித்த விவரங்கள், தத்தெடுப்பதில் உள்ள சட்ட விவரங்கள், சிக்கல்கள் ஆகியவை குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசனமான நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தை இல்லாத தம்பதிகளும் தத்தெடுக்க குழந்தை வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
Comments
chennai சென்னை குழந்தைகள் couple ஹோட்டல் kanimozhi hotel welfare poongothai அமைச்சர் பூங்கோதை சமூக நலத்துறை தம்பதிகள்
Story first published: Thursday, May 3, 2007, 5:30 [IST]