இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சாப்பாடுகண்ட்ரோல்: நெய், மட்டன், சிக்கனுக்கு தடை
கொல்கத்தா:இந்திய கிரிக்கெட் வீரர்களின் உணவு விஷயத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு தடை போடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது வீரர்களின் பிட்னஸ் அழகாக வெளிப்பட்டது. பந்தைப் பிடிக்க ஓட முடியாமல் பந்து மாதிரிேய அவர்களும் உருண்டு கொண்டிருந்தனர்.
இந் நிலையில் வங்கதேசத்துடனான ஒன்டே, டெஸ்ட் போட்டிகளுக்கு அணி தயாராகி வருகிறது. வரும் 10ம் தேதி முதல் இந்த டூர் தொடங்குகிறது.
வங்கதேச அணியில் அனைவருமே இளைஞர்கள். புலி மாதிரி பாய்ந்து பீல்டிங் செய்து வருகின்றனர்.
நம் அணியில் பெரும்பாலானவர்கள் முன்னாள் இளைஞர்கள் தான். தங்கள் லோக்கல் பாலிடிக்ஸ், உள்ளடி வேலைகளை பயன்படுத்தி அணியில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.
வங்கதேசத்தில் போய் கேவலப்படுவதைத் தவிர்க்க நம் வீரர்களுக்கு உடல் திறனை அதிகரிக்கும் வேலையில் பயிற்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இதற்காக புதிய டயட் சார்ட் வகுக்கப்பட்டுள்ளது. கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு தடா போடப்பட்டுள்ளது. நெய்யில் வறுத்த முந்திரி போன்ற ஐயிட்டங்களை இவர்கள் விரும்பி அடிப்பது வழக்கம். இனி அதற்கும் தடை போடப்படுகிறது.
காய்கறிகள் அதிகம் சேர்க்கப்படுமாம். நோ நெய், நோ டால்டா. ஐஸ்கிரீம் கிடையாது. பொரித்த முட்டை சாப்பிடக் கூடாது.
மட்டன் குருமாவும் சாப்பிடத் தடை. ஒேர ஒரு சிக்கன் பீஸ், ஒரே ஒரு மீன் வறுவல் துண்டு ஆகியவை அனுமதிக்கப்படும்.
இவ்வாறு பல விதமாக நாக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இனியாவது அணி தேறுமா என்று பார்ப்போம்