For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அமெரிக்காசெல்லும் இந்திய மாம்பழங்கள்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:18 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் மாம்பழ ஏற்றுமதி தொடங்கியுள்ளது.

First batch of Indian mangoes land in US

இந்தியாவில் ஆண்டு தோறும் 1.20 கோடி மெட்ரிக் டன் மாம்பழங்கள் விளைகிறது. இதன்மூலம் உலகிலேயே அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான்.

இந்திய மாம்பழங்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. ஆனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்களில் பூச்சித் தாக்குதல் இருப்பதாகக் கூறி கடந்த 1989ம் ஆண்டு இந்திய மாம்பழத்துக்கு அெமரிக்கா தடை விதித்தது.

Mangoes

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே விவசாய வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் கடந்த 18 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த மாம்பழ ஏற்றுமதி கடந்த வாரம் தொடங்கியது. கடல் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இந்திய மாம்பழங்கள் அமெரிக்கா போய் சேர்ந்துள்ளன.

அந்த மாம்பழங்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் ரான் சோமர்ஸ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இந்திய விவசாயிகளுக்கு மனமார்ந்த நன்றியினை இந்த கவுன்சில் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X