For Daily Alerts
Just In
ஜெயலலிதா இல்லாத ரோஜா பூங்கா!!
ஊட்டி:ஊட்டியிலுள்ள ரோஜா மலர் பூங்காவின் முகப்பிலிருந்து ஜெயலலிதா ரக ரோஜா செடி அகற்றப்பட்டுவிட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஊட்டி தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. இதில் 3,000 வகை ரோஜா செடிகள் உள்ளன. அந்த பூங்கா சர்வதேச ரோஜா சங்கத்தின் கார்டன் ஆப் தி எக்சலன்ஸ் விருதை பெற்றது.
இந்த ரோஜா பூங்காவுக்கு புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா பூங்கா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
இந் நிலையில் இப்போது அந்த பெயர் பலகை தூக்கப்பட்டுவிட்டது.
1996ம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது அெமரிக்காவில் ஒரு தெருவுக்கே ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டதாக பெரும் அமர்க்களம் எல்லாம் நடந்தது நினைவுகூறத்தக்கது.
Comments
Story first published: Thursday, May 3, 2007, 5:30 [IST]