For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கேப்டன்!

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:உலகக் கோப்பையை வெல்லாமல் வந்ததற்காக இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அந்த நாட்டு அணியின் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற இலங்கை அணி நேற்று கொழும்பு திரும்பியது.

லண்டனிலிருந்து நேரடியாக கொழும்பு வர முடியாமல் தவித்த இலங்கை அணியின் வீர்ரகள் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் நாடு திரும்பினர்.

Srilankan team

விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. பின்னர் விமான நிலையத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகம் வரை வீரர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

வழியெங்கும் மக்கள் கூடி நின்று கிரிக்கெட் வீரர்களை கையசைத்து வரவேற்றனர்.

கன மழை பெய்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை வீரர்களை மக்கள் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயவர்த்தனே பேசுகையில், கோப்பையை வெல்லாமல் வெறும் கையுடன் நாடு திரும்பியற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

வீரர்கள் என்றால் இவர்கள் வீரர்கள். வீரர்கள் என்றால் இவர்கள் வீரர்கள். நம்மவர்கள என்றால் விளம்பர நிறுவனங்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X