விஜய்காந்த் வாங்கிய சம்பளம்-அமைச்சர் கேள்வி
சென்னை: நடிகர்களை நம்பாதீர்கள், நடித்தே மக்களை ஏமாற்றி விடுவார்கள் என தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் திமுக சார்பில் நடந்த இளைஞர் எழுச்சி நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,
கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு ஆட்சிக்கு வரும்போது தமிழகம் உயர்கிறது. தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும். இன்று கட்சி தொடங்கும் பலர் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
சிலர் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் அரசியலை தேடி வருகின்றனர். நடிகர் விஜயகாந்திற்கு சினிமாவில் வாய்ப்பில்லை என்றாகி விட்ட நிலையில் அரசியலுக்கு பிழைப்பு தேடி வந்திருக்கிறார்.
இதுநாள் வரை அரசியலில் கருணாநிதி செய்யாத சாதனைகளையா இவர் செய்துவிடப் போகிறார். தமிழகத்தில் லஞ்சம் பெருகிவிட்டது என கூறும் விஜயகாந்த் ஒரு படத்திற்கு எவ்வளவு பணம் வாங்கினார் என்ற உண்மையை சொன்னால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்.
நடிகர்களை நம்பாதீர்கள், அவர்கள் நடித்தே மக்களை ஏமாற்றி விடுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications