பெரியாறு அணை கைப்பிடிச்சுவர் மீண்டும் சேதம்!:கேரளாவின் உள்குத்து!!
கூடலூர்:பெரியாறு அணையின் கைப்பிடிச்சுவர் 15 அடி நீளத்துக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு மறுத்த வருகிறது.
மேலும் அணை பலவீனமாக இருப்பதாக கூறி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிபுணர் குழுவை அழைத்து வந்து அணைப்பகுதியில் அடிக்கடி கேரள அரசு செய்து வருகிறது. அப்போதெல்லாம் தமிழக அதிகாாிகளை மிரட்டுவதையும் மலையாளிகள் ஒரு வேலையாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த வாரம் பெரியாறு அணைக்கு நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்தது. இதற்கு பதில் நடவடிக்கையாக கேரள அணைகள் பாதுகாப்பு குழுவின் தலைவர் சசிதரன் தலைமையிலான குழு ஒன்று நேற்று முன்தினம் அணைக்கு சென்று பார்வையிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணையின் கைப்பிடி சுவர் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அணை பலவீனமாக உள்ளதாக வெளியுலகுக்குக் காட்ட கேரளாவே இந்த அசிங்க வேலையை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரியாறு அணையின் கைப்பிடிச்சுவர் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியாறு அணைப்பகுதி முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த போதும், பாதுகாப்பு பணியில் கேரளா போலீசார் 30 பேர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கைப்பிடிச்சுவர் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பின் கடந்த 6 மாதங்களாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கேரள போலீசாரும் அணைப் பகுதிக்குள் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் அணையின் கைப்பிடிச் சுவர் திடீரென 15 அடி நீளம், 2 அடி அகலத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கேரள அணை பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் அணைக்கு சென்று வந்த பிறகு இது நடைபெற்றுள்ளதால். இதை கேரள போலீசாரே செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் அணை பலமிழந்து விட்டதாக பிரசாரம் செய்து, தமிழகத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்த கேரளம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.