தினகரன் ஊழியர்கள் சென்னையில் சாலை மறியல்
சென்னை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தினகரன் நாளிதழின் ஊழியர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் திமுகவினர் நடத்திய வன்முறைத் தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று பத்திரிக்கையாளர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
கடலூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் உள்ளிட்ட சில ஊர்களிலும் இன்று பத்திரிக்கையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலம் சென்றனர்.
சென்னையில், லஸ் முனையில் தினகரன் ஊழியர்கள் கூடி சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். கருப்பு பேட்ஜ் அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அழகிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதேபோல சன் குழுமத்திற்கு சொந்தமான குங்குமம், சன் டிவி ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணியாற்றி வருகின்றனர்.