நுழைவு தேர்வு ரத்து: தமிழக அரசின் உத்தரவுக்குதடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: தமிழகத்தில் நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.
இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, தமிழக அரசின் சட்டம் செல்லும் எனவும் அறிவித்து.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், ஜெயின் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. இது அரசின் கொள்கை முடிவு. உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. இதன் மேல் விசாரணை வரும் 17ம் தேதி நடைபெறும் என அறிவித்தனர்.