ராதிகா செல்விக்கு மத்திய அமைச்சர் பதவி:கருணாநிதிக்கு நாடர்கள் கூட்டமைப்பு பாராட்டு
சென்னை:திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பியுமான ராதிகா செல்விக்கு மத்திய இணை அமைச்சர் பதிவு வழங்கியதற்காக இந்திய நாடார்கள் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கூட்டமைப்பு அலுவலக்தில் இந்திய நாடர்கள் கூட்டமைப்பு தலைவர் நெல்லை நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்,
நமது நீண்ட நாள் கோரிக்கையான மத்திய அமைச்சரையில் நமது சமுதாயத்திற்கு உரிய பங்களிப்பு வேண்டும் என்பதாகும்.
அதன்படி மத்திய அரசிடம் வற்புறுத்தி நமது சமுதாயத்தை சேர்ந்த திருச்சொந்தூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராதிகா செல்வியை மத்திய இணை அமைச்சராக்கி நமது கனவை நினைவாக்கிய தமிழக முதல்வர் கருணாநிதியை பாராட்டுகிறோம்.
கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று ராதிகா செல்விக்கு அமைச்சர் பதவி வழங்கிய பிரமருக்கும், ஜக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர் சோனியா காந்திக்கும் எங்களது நன்றி.
நமது சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்கிற வகையில், நமது சமுதாயத்தின் மீது கூடுதல் மரியாதை செலுத்தும் வகையிலும், ராதிகா செல்வி தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கு மதிப்பும், மரியாதையும் கூடும் வகையில் செயல்பட வாழ்த்துகிறோம் என கூட்டதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.