பிளஸ்டூ: டி.சி வாங்க ரத்த குரூப்பை தெரிவிக்க தேவையில்லை
சென்னை:பிளஸ்டூ மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் (டி.சி) ரத்தப் பிரிவை குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவு நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ்டூ முடித்த மாணவ, மாணவியரின் மாற்றுச் சான்றிதழில் அவர்களின் ரத்தப் பிரிவை குறிப்பிட வேண்டும் என பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவால் மாணவர்களும், பெற்றோர்களும் அதிர சிரமமத்திற்கு ஆளாகினர்.
இந் நிலையில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் மாற்றுச் சான்றிதழில் ரத்தப் பிரிவு குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு வருகிற 25ம் தேதித மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு மாற்றுச் சான்றிதழில் ரத்தப் பிரிவை குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது.
ரத்தப் பிரிவு குறிப்பிடாமல் வழக்கம் போல மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.