பாலாற்றின் அணை, பக்கத்தில் குட்டி அணைதமிழகத்தை சீண்டும் ஆந்திரம்
நகரி: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதோடு, அதன் அருகே ஒரு சிறிய அணை கட்டவும் ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது.
ஆந்திர அரசு குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டு, இதற்காக ரூ.55 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளது. இந்த அணை கட்டுவதற்கான ஆன்-லைன் மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஆந்திர அரசு மேலும் ஒரு சிறிய அணையை இதனை ஒட்டி கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.38.55 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்த சிறிய அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் பெரிய அணையில் தேக்கி வைக்கப்படும்.
இந்த 2 அணைக்களுக்கும் சேர்த்துதான் ரூ.55 கோடி நிதியை ஒதுக்கியதாக சித்தூர் மாவட்ட நீர்ப்பாசனதுறை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும், ஆந்திர அரசு அணை கட்டும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த 2 அணைகளையும் கட்டப்பட்டால் தமிழகத்தின் வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களும் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.