For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமரியில் தொடரும் கடல் கொந்தளிப்பு:இன்றும் கடல் உள் வாங்கியதால் பீதி

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. பல இடங்களில் கடல் உள் வாங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களாகவே கன்னியாகுமரி, நாகப்பட்டனம், ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகம் காணப்படுகிறது. பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

இன்றும் குமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு அதிகம் காணப்படுகிறது. பல இடங்களில் கடல் உள் வாங்கியது. கன்னியாகுமரியில், கடல் நீர் 10 மீட்டர் தொலைவுக்கு உள் வாங்கியதால், விவேகானந்தர் பாறை மற்றும் வள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கடல் கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடலோர பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X