ராமேஸ்வரம் கடலில் கரை ஒதுங்கியமேலும் ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு
ராமேஸ்வரம்ராமேஸ்வரம் அருகே மேலும் ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு கரை ஒதுங்கியது.
கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம் பகுதியில் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள், வெடிகுண்டுகள் கடலில் மிதந்து கரை ஒதுங்கின. கடந்த டிசம்பர் மாதம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த இருதயராஜ் என்பவரது மீன்பிடி வலையில், ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு சிக்கியது.
பின்னர் ஏப்ரல் 9ம் தேதி இரண்டு குண்டுகள் சிக்கின. அதேபோல ஏப்ரல் 30ம் தேதி ராமேஸ்வரம் அருகே ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு கரை ஒதுங்கியது.
இந்த நிலையில் நேற்று சோரங்கோட்டை என்ற இடத்தில் கடலில் மிதந்து வந்த ராக்கெட் லாஞ்சர் குண்டை மீனவர்கள் பார்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
2 அடி நீளம், ஒரு அடி அகலம், 17 கிலோ எடை கொண்ட அந்த ராக்கெட் லாஞ்சர் குண்டை போலீஸார் கைப்பற்றினர். விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சரில் இவை பயன்படுத்தப்படக் கூடியது என்று போலீஸார் தெரிவித்தனர்.