For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரம்பிக்குளம்: தமிழக அணையில் கேரளா அதிகாரிகள் ரகசிய ஆய்வு

By Staff
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி:sதமிழகம்-கேரளா மாநிலங்களின் எல்லையுள்ள பரம்பிக்குளம் அணையை, கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ரகசியமாக பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உச்சத்தில் உள்ள நிலையில் தமிழக எல்லையிலுள்ள பரம்பிக்குளம் நீராறு அணையிலும் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளது.

நேற்று கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் நீராறு அணை பார்வையிட்டு, தண்ணீர் அளவு குறித்து சோதனை செய்துவிட்டுச் சென்றனர்.

ஆனால் அவர்கள் வருகை குறித்து தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரவில்லை.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கேரளாவிற்கு பரம்பிக்குளம் ஆழியாறு அணையிலிருந்து ஆண்டுக்கு 7.25 டிஎம்சி தண்ணீரும், சோலையாறு அணையிலிருந்து 12.3 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும்.

கடந்த 11ம் தேதி பாலக்காட்டில் நடந்த பரம்பிகுளம் ஆழியாறு நதிநீர் பங்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் கேரள நீர்ப்பாசத்துறை அதிகாரிகள் ரகசியமாக பார்வையிட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X