For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்தான்புல் ஓபன் போட்டியில் சானியா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:இன்று துருக்கியில் தொடங்கவுள்ள இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பங்கேற்கிறார்.

மொராக்கோவில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, அதையடுத்து துருக்கியில் நடைபெறும் இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்கிறார்.

இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் பங்கேற்கிறார். இரட்டையர் போட்டிக்கு தனக்கு துணையாக தைவானின் சான் யங் ஜான் என்ற வீராங்கனையை தேர்ந்தெடுத்துள்ளார்.

இதுகுறித்து சானியா கூறுகையில்,

இஸ்தான்புல் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் சான் யங் ஜானுடன் இணைந்து விளையாடப் போகிறேன். ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் விளையாடியவர் ஜான். அவர் எனக்கு ஜோடியாகக் கிடைத்து என் அதிர்ஷ்டம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X