பெண் வார்டனை அழைத்த வம்பு வாலிபர்கள்
சென்னை: மாணவிகள் விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த வார்டனை உல்லாசமாக இருக்கலாமா என்று கேட்டு ரகளை செய்த இரு வாலிபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அடுத்த சேலையூரில் தனியார் பெண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. இங்குள்ள மாணவிகள் விடுதிக்குள் நேற்று இரவு 2 வாலிபர்கள் குடி போதையில் நுழைந்தனர்.
அப்போது பெண் வார்டன் ஒருவர் மாணவிகளின் அறைகளுக்குச் சென்று அனைவரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென இரு வாலிபர்கள் உள்ளே நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், யார் நீங்கள் என்றார்.
அதற்கு அந்த நபர்கள், ராதா எங்கே என்று கேட்டுள்ளார். அவர் இல்லை என்று அந்த வார்டன் கூறவே, அப்படியானால் சரி, நீதான் வேண்டும், உல்லாசமாக இருக்கலாம் வா என கூறி அசிங்கமாக பேசியுள்ளனர்.
இதையடுத்து அந்த வார்டன் கூச்சல் போட்டுள்ளார். பயந்து போன இரு வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அந்த விஷமிகள் இருவரையும் சேலையூர் போலீஸார் தேடி வருகின்றனர்.