For Daily Alerts
Just In
இந்தோனேஷியாவில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை
ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் சம்பவார் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆக பதிவானது. வடக்கு சுமத்ரா தீவிலும் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை வி்டப்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். இருப்பினும் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 என பதிவானது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
Comments
இந்தியா எச்சரிக்கை சுனாமி மக்கள் thatstamil quake பூகம்பம் alert international earth world news அச்சம் இந்தோனேஷியா updates online tamil sound
Story first published: Thursday, May 24, 2007, 5:30 [IST]