இந்திய அணிக்கு பயிற்சியாளராக மதன்லால் விருப்பம்
டெல்லி:இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருக்க இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மதன்லால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலககோப்பை போட்டியில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியதையெடுத்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினர் சேப்பல்.
இந் நிலையில் இந்திய அணி வங்கதேச சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இதற்கு இடைக்கால பயிற்சியாளராக ரவிசஸ்திரி மானேஜர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் ஜூன் 4ம் தேதி புதிய பயிற்சியாளரை தேர்வு நடக்கிறது. இதில் தற்போதைய வங்கதேச பயிற்சியாளர் வாட்மோர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந் நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சளாரும், முன்னாள் பயிற்சியாளருமான மதன்லால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சியாளர் வாய்ப்பு கொடுத்தல் அதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். இதற்கு முன் பயிற்சியாளர் பதவியில் நான் சிறப்பாக செயல்பட்டேன். இதனால் மீண்டும் பயிற்சியாளராக இருக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
இவர் 1996-1997ம் ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.