For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை ரயில்வே குடியிருப்பில் மர்ம தீஷைனியின் பைக் உள்பட 4 பைக்குகள் தீக்கிறை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:ரயில்வே குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டர் சைக்கிள்களும், ஒரு சைக்கிளும் மர்மான முறையில் எரிந்து நாசமாயின.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ரயில்வே ஊழியர்களின் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் எப்-பிளாக்கில் தெற்கு ரயில்வே சென்னை மண்டலத்தின் மோலாளர் பிரகாசம், ஓட்டப் பந்தய வீராங்கனை சைனியின் கணவர் வில்சன் உள்பட பலர் வசித்து வருகின்றனர்.


இந் நிலையில் நள்ளிரவு மணி 12.30 மணியளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து கரும் புகை வந்தது. இதையடுத்து குடியிருப்பில் உள்ளவர்கள் அலறி அடித்து தரைதளத்திற்கு ஓடிவந்தனர்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹீரோ ஹோன்டா, வில்சனின் ஹோன்டா ஆக்டிவா, பஜாஜ் ஆகிய ஸ்கூட்டர் மற்றும் ஒரு சைக்கிள் எரிந்து கொண்டிருந்தன.

Shinywilson

இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு இதையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தது தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வாகனங்கள் எரிந்துவிட்டன.

இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அருகில் இருந்த மின்சார மீட்டர் பெட்டியிலிருந்து மின் பொறி பறந்து வநத்து ஸ்கூட்டர்கள் மீது விழந்து தீ பிடித்து எரிந்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்பட்டனர்.

ஆனால் தீப் பொறி பறந்ததற்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. இதையடுத்து இந்த சம்வத்தில் பெட்ரோல் திருடும் கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

கடந்த மாதம் அசோக் நகர், வடபழனி பகுதிகளில் வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மர்மான முறையில் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மன நோயளி ஒருவனை போலீஸார் கைது செய்யதனர்.

இந் நிலையில் தெற்கு ரயில்வே குடியிருப்பில் இரு சக்கர வாகனங்கள் தீபிடித்து எரிந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X