சிபிஎஸ்சி-ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்!!
சென்னை:இரட்டையர்களாக பிறந்த சகோதரிகள் சிபிஎஸ்சி தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
உத்தர பிரேதசத்தை சாரங்பூரிலுள்ள ஆஷா மாடர்ன் பள்ளி முதல்வராக இருக்கும் புவன் ஜெயியின் மகள்கள் சோனாலி, ரூபாலி. இரட்டை குழந்தைகளான இவர்கள் அதே பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வில் பாடவாரியாகவும், மொத்தமாகவும் ஒரே மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இப்போது விடுமுறையில் சென்னையில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்களை பற்றி அவரது தாய் சந்த்னா ஜெயின் கூறுகையில்,
இருவரும் 10ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.
இவர்கள் 8ம் வகுப்பு படிக்கும்போது ரூபாலிக்கு 2 மதிப்பெண் குறைவாக கிடைத்ததால், சோனாலி தன் மதிப்பெண்ணை குறைத்து சமமாக்க வேண்டும் என ஆசிரியரிடம் கேட்டாள். ஆனால் ஆசிரியர் மறுத்துவிட்டார். இதனால் இருவரும் 2 நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர். இவர்களின் ஒழுக்கம் காரணமாக சோனாலியின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
வணிகவியல் படிக்க வேண்டும் என்பது இருவரின் லட்சியம் என்றார்.