மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகம்-செப்டம்பர்முதல் செயல்படும்
மதுரை:மதுரையில் ரூ.50 லட்சம் செலவில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படுகிறது. செப்டம்பர் மாத இறுதியிலிருந்து இந்த அலுவலகம் இயங்கும்.
இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன் கூறியதாவது
இந்தியாவில் மொத்தம் 31 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சியில் மட்டும் இருக்கின்றன.
தமிழகத்தில் மேலும் 2 அலுவலகங்கள் மதுரை, கோவையில் அமைய உள்ளன. இதில் திருச்சி பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் மதுரையில் புதிய அலுவலகம் அமைவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த கட்டிடம் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அமைக்கப்படும். இதற்கான பூமி பூஜை ஏற்கனவே போடப்பட்டு விட்டது. அலுவலகம் முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட உள்ளது.
தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் குளிர் பதன வசதியுடன் அமைக்கப்பட போகும் அலுவலகம் இதுவே ஆகும். மதுரை அலுவலகம் 8 மாவட்டங்களை கட்டுப்படுத்தி செயல்படும் என்றார்.