பிரதமர், சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு
டெல்லி:உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகிேயாைர அவர் சந்தித்துப் பேசுகிறார்.
டெல்லியில் இன்று குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் தொடர்பான அனைத்து மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் ெசன்றார்.
இன்று மாநாட்டில் கலந்து ெகாள்ளும் ஸ்டாலின் பின்னர் பிற்பகலில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார். மாலை 3 மணிக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும், 4.30 மணிக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசுகிறார்.
மாலை 5.30 மணிக்கு சோனியா காந்தியை சந்திக்கிறார் ஸ்டாலின். அதன் பின்னர் தனது டெல்லி பயணத்தை முடித்துக் ெகாண்டு சென்னை திரும்புகிறார்.
வழக்கமாக டெல்லி விவகாரங்களில் ஸ்டாலின் தலையிடுவதில்லை. அதை அமைச்சர்கள் பாலு, ராசா ஆகியோரே கவனித்து வருகின்றனர்.
திமுக சார்பில் முன்பு தயாநிதி தான் டெல்லி அரசியல் விவகாரங்களை கையாண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து அந்தப் பணி ராசாவிடம் தரப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஸ்டாலினே சோனியாவை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.