புலிகள் அதிரடித் தாக்குதல் - 10 ராணுவத்தினர் பலி
கொழும்பு:வவுனியா அருகே விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 34 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கிழக்கில் உள்ள தொப்பிகாலா பகுதியை ராணுவம் பிடித்துள்ளதாக இலங்கை அரசு கூறி வரும் நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது.
இந்த நிலையில், வவுனியாவில் நேற்று இரவு முழுவதும் ராணுவத்தினர் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். பீரங்கிகளால் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலால் ராணுவம் நிலை குலைந்தது.
வவுனியா-மன்னார் சாலையில் உள்ள பெரியதம்பனை என்ற இந்த கடும் சண்டை நடந்தது. புலிகளின் இந்த திடீர் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்னர். 34 வீரர்கள் படுகாயமடைந்தனர். ராணுவத் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, புலிகளை தொப்பிகாலா பகுதியிலிருந்து வெளியேற்ற முடியாத ராணுவம் தற்போது ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்கி வருகிறது.