கோவிலுக்குள் சிறுமியை கற்பழிக்கமுயன்ற பூசாரி-பொது மக்கள் தர்ம அடி
சென்னை:கோவிலுக்குள் சிறுமியை அழைத்துச் சென்று அவரைக் கற்பழிக்க முயன்ற காமக் கொடூர பூசாரியை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை மேற்கு முகப்பேரில் பிளாட்பாரம் ஒன்றில் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பூசாரியாக கோபிநாத் (40) என்பவர் இருந்து வந்தார். இவருக்கு சிவகங்கை சொந்த ஊராகும்.
தனது பெரியம்மா வீட்டில் தங்கி பூசாரியாக இருந்தார். கல்யாணம் ஆகாதவர் கோபிநாத். இந்தக் கோவிலுக்கு அருகே ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. அந்தப் பள்ளியில் 6வது வகுப்புப் படித்து வரும் சிறுமி ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
ரேணுகா மீது கோபிநாத்துக்கு காமவெறி எழுந்தது. பள்ளிக்குப் போகும்போதும், வரும்போதும் சாந்தியை காமப் பார்வை பார்த்து பேச்சும் கொடுப்பாராம்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி விட்டதும் ரேணுவா வெளியே வந்தார். அப்போது சாந்தியை அழைத்த கோபிநாத், நீ தேர்வுகளில் அதிக மார்க் வாங்குவதற்காக சிறப்புப் பூஜை செய்யப் போகிறேன். எனவே கோவிலுக்கு வா என்று கூப்பிட்டுள்ளார்.
அதை நம்பிய ரேணுகாவும் பூசாரியுடன் கோவிலுக்குள் சென்றார். அப்போது கோவில் என்றும் பாராமல், காமவெறி தலைக்கேற கோவிலுக்குள்ளேயே ரேணுகாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் வக்கிரப் புத்தி கொண்ட கோபிநாத்.
அந்த சமயம் பார்த்து ஒரு மூதாட்டி சாமி கும்பிட வந்தார். அவர், கோபிநாத்தின் செயலைப் பார்த்து அதிர்ந்துபோய் கூச்சல் போட்டார்.
இதையடுத்து திரண்டு வந்த பொதுமக்கள் கோபிநாத்தை மடக்கிப் பிடித்து வெளியே கொண்டு வந்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.