கற்பழிக்க முயன்ற தந்தையை அம்மிக் கல்லால்அடித்து கொன்ற மகள்
மதுரை:பெற்ற தந்தையே கற்பழிக்க முயன்றதால் அதிர்ச்சி அடைந்த மகள் அம்மிக் கல்லால் தந்தையை தலையில் அடித்தும், கோடாரியால் வெட்டியும் கொலை செய்தார்.
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் சுப்புத் தேவர். கூலித் தொழிலாளியான இவர் எப்போதும் குடிபோதையில்தான் இருப்பார்.
இவருக்கு முத்தாலம்மா என்ற மனைவியும், மாலா என்ற மகளும் உள்ளனர்.
மாலா தனது கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டில் தங்கியிருந்தார். இந் நிலையில் இரவு மாலா வீட்டுக்குள்ளும், தாயும், தந்தையும் வீட்டுக்கு வெளியிலும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் எழுந்த சுப்புத் தேவர், மகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தார். மகள் என்றும் பாராமல் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த மாலா, அருகே இருந்த அம்மிக் கல்லை எடுத்துத் தந்தையின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.
அப்படியும் ஆத்திரம் தீராமல் கோடாரியை எடுத்து சரமாரியாக வெட்டித் தள்ளினார். இதில் ரத்த வெள்ளத்தில் சுப்புத் தேவர் பிணமானார்.
பின்னர் தந்தையின் உடலை கட்டிலில் போட்டு விட்டு படுத்துக் ெகாண்டார்.
மறு நாள் காலை எழுந்த முத்தாலம்மா, கணவர் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார். போலீஸாருக்குத் தகவல் போனது.
அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் துப்பறியும் நாய், மாலாவிடம் போய் நின்று அவரது சேலையைக் கவ்வியது.
இதையடுத்து மாலாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் உண்மையைக் கூறி கதறி அழுதார்.
3 மாதத்திற்கு முன்பே சுப்புத் தேவர் மாலாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளார் மாலா. ஆனால் முத்தாலம்மா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார்.
மாலாைவப் போலீஸார் கைது செய்து, சுப்புத் தேவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.