அரசு பஸ்களில் வெள்ளை ரவிக்குகண்ணீர் அஞ்சலி போஸ்டர்!
சென்னை:ஒசூர் அருகே போலீஸ் எண்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரெளடி வெள்ளை ரவியின் உடல் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வியாசர்பாடியில் உள்ள அவனது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.
இன்று அவனது உடல் தகனம் செய்யப்படுகிறது.
இந் நிலையில் வெள்ளை ரவிக்கு கண்ணீர் அஞ்சலி என்று வியாசர்பாடி பகுதியில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அரசு பஸ்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடி பகுதி முழுவதும் போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடைய சுட்டுக் கொல்லப்பட்டபோது வெள்ளை ரவியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகின்றன.
வெள்ளை ரவி பயன்படுத்திய ரிவால்வர், அரிவாள் மற்றும் அவனது கூட்டாளியான குணா பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, காலி தோட்டாக்கள், பெட்ரோல் குண்டு சிதறல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஆயுதங்கள் ஓசூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளன.
வெள்ளை ரவி சுடப்பட்ட இடத்தை ஓசூர் ஆர்.டி.ஓ ராஜேந்திரன் பார்வையிட்டார்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.