கோவை குண்டுவெடிப்பு: 84 குற்றவாளிகளுக்குஜாமீன் கிடைக்குமா? நாளை தெரியும்
Subscribe to Oneindia Tamil
கோவை:கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 84 பேர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது நாளை நீதிபதி உத்திராபதி தீர்ப்பு அளிக்கவுள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சாதாரண பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் என கடந்த 1ம் தேதி தீர்ப்பளித்த போது நீதிபதி உத்திராபதி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து 84 குற்றவாளிகள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அனேகமாக இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுக்கான தண்டனை விவரமும் நாளையே அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications