For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றாலத்தில் விபச்சாரப் பெண் கொலை

By Staff
Google Oneindia Tamil News

குற்றாலம்: ஒவ்வொரு வருடமும் குற்றால சீசன் களைகட்டும்போது இங்கு விபச்சாரமும் பெருகிவிடும்.

இந் நிலையில் கடந்த 11ம் தேதி இரவு இரு பெண், 2 ஆண்கள் ஆகியோர் அண்ணாசிலை வட புறமுள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர்.

பாபநாசம் சென்று வருகிறோம் என்று விடுதி அலுவலகத்தில் கூறி விட்டு சென்றனர்.

இந்நிலையில் அறையிலிருந்து துர்நாற்றம் வரவே ஊழியர்கல் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு கட்டிலுக்கு அடியில் 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் விபச்சார அழகி என்றும் பெயர் புஷ்பா, சொந்த ஊர் புளியங்குடி என்பதும் தெரிய வந்துள்ளது. அவருடன் வந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

குற்றாலத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன் இதேபோல் இரு விபச்சார அழகிகள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X