சென்னை பல்கலை: மாணவர்களுக்கு ஐ.டி. நிறுவனவேலை கிடைத்தால் ஆசிரியர்களுக்கு பரிசு!
சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் வேலை கிடைத்தால், அவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சித் திட்டத்தை இந்திய தொழிலக கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 75 நாட்களில் 121 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் பேசுகையில், இந்த்த திட்டத்தின் வெற்றி, எத்தனை மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்பதைப் பொருத்துத்தான் தெரிய வரும்.
எனவே சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் வேலை கிடைத்தால், அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு அளிக்கப்படும்.
ஒரு மாணவருக்கு வேலை கிடைத்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு ரூ. 1000 பரிசு தரப்படும். 2 பேருக்கு கிடைத்தால் ரூ. 2000 வழங்கப்படும். இந்தப் பரிசினை சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது மாணவியை வேலைக்கு எடுக்கும் நிறுவனமே வழங்கும் என்றார்.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தற்ேபாைதய தேவைக்கேற்ப எப்படி பாடம் நடத்துவது, மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவது, பேச்சுத் திறமை மற்றும் வேலைச் சூழலுக்குத் தேவையான திறமைகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பின்னர் ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு போதிப்பார்கள்.