For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவள்ளூர் மாவட்டத்தில் காலரா பரவுகிறது: பெண் பலி-மேலும் 8 பேர் மருத்துவமனையில்

By Staff
Google Oneindia Tamil News


திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் காலரா பரவி வருகிறது. இதற்கு ஒரு பெண் பலியாகிவிட்டார். மேலும் 8 பேர் காலராவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இங்கு காலரா பாதிப்பு இல்லை என மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.

அரவான்வயில்குப்பம் பகுதியில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட முருகாம்பாள் என்ற 45 வயது பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார். அதே போல இப் பகுதியைச் சேர்ந்த மேலும் 8 பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு காலரா தாக்கியிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சுகாதாரமற்ற நீரைப் பருகியதால் இவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X