For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் ரயில் தீ- பயணிகள் தப்பினர்

By Staff
Google Oneindia Tamil News


டெல்லி:

குஜராத்தில் வதோதரா அருகே சென்று கொண்டிருந்த ஆவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

கோரக்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த அந்த ரயில் நேற்றிரவு குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் சென்றபோது எஸ்-10 பெட்டியில் தீப் பிடித்தது. இந்தத் தீ அடுத்தடுத்து 5 பெட்டிகளுக்குப் பரவியது.

இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.

இரவு முழுவதும் நிறுத்தப்பட்ட இந்த ரயில் இன்று காலை மாற்று பெட்டிகள் பொருத்தப்பட்டு புறப்பட்டுச் சென்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X