For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணீர் கேட்டு நகை அபேஸ் - 2 பெண்களுக்கு வலை

By Staff
Google Oneindia Tamil News


தூத்துக்குடி:

குடிக்கத் தண்ணீர் கேட்பது போல நடித்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற 2 பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அந்தோணியர் தெருவில் வசிப்பவர் கிரேஸ் எஸ்டிலன். கணவர் இறந்துவிட்டார். நேற்று மதியம் கிரேஸ் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கைக்குழந்தையுடன் 2 பெண்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் குடிக்க தண்ணீர் வேண்டுமென கிரேஸிடம் கேட்டனர்.

அப்போது அவர் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றபோது வீட்டு மேசையில் வைத்திருந்த 42 கிராம் செயின், 32 கிராம் பிரஸ்லெட் ஆகியவற்றை அந்த பெண்கள் திருடி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X