For Daily Alerts
Just In
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: சுனாமி பீதி
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அங்கு கடும் பீதி நிலவுகிறது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் பெங்குலு என்ற இடத்திலிருந்து தெனமேற்கு திசையில் 145 கிமீ தொலைவில் கடலுக்கடியில் இன்று காலை 10.45 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 6.2 புள்ளிகளாக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் மக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி தெருக்களில் கூட்டம் கூட்டமாக நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டதால் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றவாறு உள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னமும் தெரியவில்லை.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 18:04 [IST]