For Quick Alerts
For Daily Alerts
Just In
டி.ஆர். பாலுவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
தென்காசி:
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பேசியதைக் கண்டித்து தென்காசியில் அதிமுக வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.
தென்காசி தாலுகா அலுவலகம் முன்பு நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்ேபாது, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நீதித் துறையையும், நீதிபதிகளையும் அவதூறாக பேசியதைக் கண்டித்து கோஷமிடப்பட்டது.
அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வக்கீல்கள் வலியுறுத்தினர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:49 [IST]