For Daily Alerts
Just In
திருப்பதிக்கு நில தானம்-பதிவுக் கட்டணம் இலவசம்
திருப்பதி:
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினால் அந்த நிலங்களை பதிவு செய்வதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ரமணாச்சாரி கூறுகையில்,
ஆந்திர மாநில எம்எல்ஏ வெங்கடரமணா, சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரியில் ரூ.72.6 லட்சம் மதிப்புள்ள இடத்தை கோவிலுக்கு கொடுத்துள்ளார்.
இந்த நிலத்திற்கான பதிவு கட்டணத்தை ஆந்திர அரசு ரத்து செய்து விட்டது. அதேபோல, எதிர்காலத்தில் திருப்பதி கோவிலுக்கு யார் நிலத்தை தானமாக கொடுத்தாலும், அதற்கு பதிவு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இதற்கான உத்தரவை ஆந்திர அரசு பிரப்பித்துள்ளது.
இதேபோல தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசும் பதிவு கட்டணத்தை விலக்கை அளிக்க வேண்டும் என்றார் அவர்.
Comments
Story first published: Thursday, October 11, 2007, 9:58 [IST]