For Daily Alerts
Just In
கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி
பரோடா:
மத்தியப் பிரதேச மாநிலம் பரோடா அருகே உள்ள காளி மாதா கோவிலில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பக்தர்கள் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பரோடா அருகே உள்ள பகவத் மலையில் பிரபலமான காளி மாதா கோவில் உள்ளது. இந்த மலையும் அங்குள்ள கோவிலும் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலில் இன்று முற்பகல் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. அப்போது திடீரென பக்தர்களிடையே நெரிசதல் அதிகரித்ததால் அதில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். 11 பேர் மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை அதிகாரிகள் கோவிலில் முகாமிட்டுள்ளனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 17:58 [IST]