For Daily Alerts
Just In
சங்கரராமன் வழக்கு-நவம்பர் 26க்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை வரும் நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், ஜெயேந்திரர்-விஜயேந்திரர் இருவரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:13 [IST]