For Daily Alerts
Just In
பதிவு பெற்ற கட்சியானது சரத்குமாரின் அ.இ.ச.ம.க.
டெல்லி: நடிகர் சரத்குமார் தொடங்கியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
சமீபத்தில் அரசியலில் குதித்த சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை சென்னையில் தொடங்கினார். இந்தக் கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தற்ேபாது சரத்குமாரின் கட்சியை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக அனுமதித்துள்ளது.
பதிவு பெற்ற அரசியல் கட்சியாக இருந்தபோதிலும் சரத்குமார் கட்சிக்கு சுயேச்சை சின்னமே தேர்தல்களில் ஒதுக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தைப் பெற்றால் மட்டுமே நிரந்தர சின்னமும், கட்சிக்கு அங்கீகாரமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, October 27, 2007, 10:58 [IST]