அமராவதி நதி சீரமைப்புக்கு ரூ. 84 கோடி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நதியை ரூ.84 கோடியில் தூர் வாரி சீர்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.வெங்கடேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், கரூர் அமராவதி நதியை தூர் வாரி சீர்படுத்தவும், கரைகளைப் பலப்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கரூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.
இந்தப் பணியை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.7 கோடியை தமிழக அரசு ஒதுக்குமாறு அரசைக் கோரியுள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications