மனைவியை காட்டி பணம் பறித்த கணவன் கைது!
சேலம்: மனைவியை வைத்து உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறிக்க முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவரான குமார் என்பவர் சேலத்திலிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு லாரியை ஓட்டிக் கொண்டு வந்தார். மேச்சேரி-தொப்பூர் மெயின் ரோட்டில் நடுரோட்டில் லாரியை கையை காட்டி மறித்த பெண் ஒருவர், குமாரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
சல்லாபத்திற்கு உள்ளான குமார், லாரியை ஓரமாக நிறுத்தினார். அவரை அருகே இருந்த காட்டுப் பகுதிக்குள் அந்தப் பெண் அழைத்துச் சென்றார்.
அப்போது புதர் மறைவில் மறைந்தீருந்த சிலர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி லாரி டிரைவர் குமாரிடம் இருந்த ரூ.1,500யைப் பறித்தனர்.
அதிர்ச்சியடைந்த குமார் சத்தம் போட்டார். அப்போது அந்தப் பக்கம் சென்ற சிலர் ஓடி வந்தனர். அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட முயன்ற பெண்ணையும், கத்தியை காட்டி பணத்தை பிடுங்கியவர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில், லாரியை மறித்து உல்லாசத்துக்கு அழைத்தவர் பெயர் செல்வி என்றும், கத்தியை காட்டி மிரட்டியவர்களில் ஒருவர் பெயர் முனியப்பன் என்றும் தெரியவந்தது.
இதில் செல்வியும், முனியப்பனும் கணவன்-மனைவியாவர். மனைவியை வைத்து லாரி டிரைவர்களை மடக்கி மறைவான இடத்துக்கு அழைத்து வந்தவுடன் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து வந்துள்ளார் முன்யப்பன்.
இது தொடர்பாக கணவன்-மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.