For Daily Alerts
Just In
சமூக விரோதிகள் கூடாரமான சுப்பிரமணிய சிவா நினைவிடம்!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரபட்டில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவிடம் தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மறியுள்ளது.
பாரத மாதாவுக்கு கோயில் கட்ட ஆசிரமம் அமைத்த சுப்பிரமணிய சிவா வசித்த இடத்தில் இப்போது எல்லா சமூக விரோத செயல்களும் நடந்து வருகின்றன.
அந்த மகான் வாழ்ந்த இடத்தில் சீட்டு ஆடுவதில் தொடங்கி வெளியில் சொல்ல முடியாத எல்லா தவறான காரியங்களும் நடந்து வருகின்றன.
இதன் நிலையைப் பார்த்து நொந்து போன தேச உணர்வு கொண்டவர்கள் சிலர் இது குறித்து கலெக்டர் அலுவலகம் வரை புகார் கூறப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:21 [IST]