For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்ச்செல்வன் இரங்கல் கூட்டம் - நெடுமாறன் தெ. ஆப்பிரிக்கா பயணம்

By Staff
Google Oneindia Tamil News
Nedumaran
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இலங்கை ராணுவத்தால் குண்டுவீசி கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் கூட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், வருகிற 27ம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் மற்றும் டர்பன் நகரங்களில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு அந்நாட்டில் உள்ள தமிழர்கள் சார்பாக இரங்கல் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பழ.நெடுமாறனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X