கொழும்பில் தமிழர்கள் கைது: வைகோ கண்டனம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களை கைது செய்யும் அடக்குமுறை நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. எந்தவிதக் காரணமும் இல்லாமல் தமிழர்களை கைது செய்து வருகின்றனர்.
தமிழர்களின் மனதில் பயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.
இலங்கைக்கு பெருமளவில் ஆயுதங்களைக் கொடுத்து விட்டு அங்கு நடப்பதைக் கண்டும் காணாமல் இருக்கிறது இந்திய அரசு. இந்தியாவிடமிருந்து பெற்ற ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை வேட்டையாடி வருகிறது இலங்கை அரசு.
ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கைது செய்து வரும் இலங்கை அரசின் உண்மையான நோக்கம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கொழும்பு சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்ய இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். இதற்காக தூதரக ரீதியிலான முயற்சிகளை அது மேற்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார் வைகோ.