For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பில் தமிழர்கள் கைது: வைகோ கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: இலங்கையில் தேடுதல் வேட்டை, விசாரணை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களை கைது செய்யும் அடக்குமுறை நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. எந்தவிதக் காரணமும் இல்லாமல் தமிழர்களை கைது செய்து வருகின்றனர்.

தமிழர்களின் மனதில் பயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.

இலங்கைக்கு பெருமளவில் ஆயுதங்களைக் கொடுத்து விட்டு அங்கு நடப்பதைக் கண்டும் காணாமல் இருக்கிறது இந்திய அரசு. இந்தியாவிடமிருந்து பெற்ற ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை வேட்டையாடி வருகிறது இலங்கை அரசு.

ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கைது செய்து வரும் இலங்கை அரசின் உண்மையான நோக்கம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கொழும்பு சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்ய இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். இதற்காக தூதரக ரீதியிலான முயற்சிகளை அது மேற்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X