For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கலுக்கு 3 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை: அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News


திண்டுக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் என்று மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் இலவச எரிவாயு அடுப்பு மற்றும் முதியோர் உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

பின்பு அவர் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மக்களுக்கு தரமான அரிசி ரூ. 2க்கு வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.60 லட்சம் குடும்பங்களுக்கு, அதாவது சுமார் 3
கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வேஷ்டி சட்டை வழங்கப்படும்.

இலவச நிலம் பெற வருமான உச்ச வரம்பு இருந்தது. அது தற்போது நீக்கப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் 4 சென்ட் நிலம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X